படைத்தவனின் கருணைகண்டு
நெஞ்சம் மகிழுங்கள்--அவன்
படைப்புகளைப் பணிந்துவணங்க
அஞ்சி நில்லுங்கள்! (படைத்தவனின்...)
நெஞ்சம் மகிழுங்கள்--அவன்
படைப்புகளைப் பணிந்துவணங்க
அஞ்சி நில்லுங்கள்! (படைத்தவனின்...)
சோதனைகள் தொடர்கையிலே
அழைத்துப் பாருங்கள்--அதைச்
சுட்டெரித்துக் காத்திடுவான்
வணங்கிப் பணியுங்கள்! (படைத்தவனின்...)
அழைத்துப் பாருங்கள்--அதைச்
சுட்டெரித்துக் காத்திடுவான்
வணங்கிப் பணியுங்கள்! (படைத்தவனின்...)
நேற்றுஇன்று நாளையென்று
காலம் வகுத்தவன்--அதை
நிறுத்திவிட்டு இறுதிநாளில்
நீதி புரிபவன்! (படைத்தவனின்...)
காலம் வகுத்தவன்--அதை
நிறுத்திவிட்டு இறுதிநாளில்
நீதி புரிபவன்! (படைத்தவனின்...)
புல்நுனியில் பனித்துளியை
அலங் கரிப்பவன்--அவனைப்
புரியாமல் வாழும்போது
கலங்க வைப்பவன்! (படைத்தவனின்...)
அலங் கரிப்பவன்--அவனைப்
புரியாமல் வாழும்போது
கலங்க வைப்பவன்! (படைத்தவனின்...)
மலைமுகட்டைக் கடலுக்குள்ளே
சுருட்டி எறிபவன்--அந்த
அலைகடலைத் தூரஓட்டி
நகரம் செய்பவன்! (படைத்தவனின்...)
சுருட்டி எறிபவன்--அந்த
அலைகடலைத் தூரஓட்டி
நகரம் செய்பவன்! (படைத்தவனின்...)
சூரியனை எரியவிட்டுப்
பகலைப் படைத்தவன்--நிலாச்
சுடருக்குள் குளிரைப்பூசி
இரவை ஈந்தவன்! (படைத்தவனின்...)
பகலைப் படைத்தவன்--நிலாச்
சுடருக்குள் குளிரைப்பூசி
இரவை ஈந்தவன்! (படைத்தவனின்...)
எவரிடத்தும் எதுவும்கேட்டு
தலைகுனி யாதீர்--அவன்
சுவனம்செய்து காத்திருக்கும்
நிலைமற வாதீர்! (படைத்தவனின்...)
தலைகுனி யாதீர்--அவன்
சுவனம்செய்து காத்திருக்கும்
நிலைமற வாதீர்! (படைத்தவனின்...)
No comments:
Post a Comment