Tuesday, June 23, 2015

எப்போதோ கொட்டிய மழைத்துளிகள்!!!



படைத்தவனின் கருணைகண்டு
நெஞ்சம் மகிழுங்கள்--அவன்
படைப்புகளைப் பணிந்துவணங்க
அஞ்சி நில்லுங்கள்! (படைத்தவனின்...)

சோதனைகள் தொடர்கையிலே
அழைத்துப் பாருங்கள்--அதைச்
சுட்டெரித்துக் காத்திடுவான்
வணங்கிப் பணியுங்கள்! (படைத்தவனின்...)

நேற்றுஇன்று நாளையென்று
காலம் வகுத்தவன்--அதை
நிறுத்திவிட்டு இறுதிநாளில்
நீதி புரிபவன்! (படைத்தவனின்...)

புல்நுனியில் பனித்துளியை
அலங் கரிப்பவன்--அவனைப்
புரியாமல் வாழும்போது
கலங்க வைப்பவன்! (படைத்தவனின்...)

மலைமுகட்டைக் கடலுக்குள்ளே
சுருட்டி எறிபவன்--அந்த
அலைகடலைத் தூரஓட்டி
நகரம் செய்பவன்! (படைத்தவனின்...)

சூரியனை எரியவிட்டுப்
பகலைப் படைத்தவன்--நிலாச்
சுடருக்குள் குளிரைப்பூசி
இரவை ஈந்தவன்! (படைத்தவனின்...)

எவரிடத்தும் எதுவும்கேட்டு
தலைகுனி யாதீர்--அவன்
சுவனம்செய்து காத்திருக்கும்
நிலைமற வாதீர்! (படைத்தவனின்...)

No comments:

Post a Comment