Thursday, June 30, 2016

பொல்லாத பூர்வீகம்...! ( 1 )



இன்றையப் பா..., நேற்றைய ஜனசங்கத்தின் திருட்டுப் பிள்ளை. நேற்றைய ஜனசங்கம் முந்தைய R.S.S யின் அடையாளம் மறைத்து வந்த
வளர்ப்பு பிள்ளை.

R.S.S. தோன்றிய விதமே மகத்தான கோளாறுப் பிரதேசம்.

பாலஸ்தீனத்தின் பயங்கர யூத தர்மம் இந்தியத்திற்குள் முகமூடி போட்டு உள் நுழையத் தனக்குத்தானே சூட்டிக் கொண்ட திருநாமம்தான் R.S.S., என்பது.

இந்தியத்திற்குள் பழம்பெரும் அரிய தத்துவ வழிபாடுகள், காலம் குறித்து அளக்க முடியாத யுகாந்திரங்களுக்கு முன்பிருந்தே இருந்து வந்திருக்கின்றன. அவைகள் அங்கங்கே ஆண்டு வந்த பழங்குடி மக்களின்
வாழ்வு அனுபவங்களாகவும் இருந்திருக்கின்றன.

உலக வரம்பிலே கூட இந்தப் பூமியின் வாழ்வுத் தத்துவம்தான் முந்தியது. மூத்தது.

இந்த உயரிய வாழ்வு முறையை கபளீகரம் பண்ண சிந்து சமவெளி வழியே
இங்கே வந்த வடிவம் மாறிய, யூத இனம் ராஜதந்திரங்களைக் கையாண்டு
வெற்றி பெற்றது.

தாங்கள் ஏற்கனவே கைவசம் கொண்டு வந்திருந்த யூத வர்க்கக் கோட்பாடுகளுக்குக் கண்,காது,மூக்கு, கை, கால்களை ஒட்டி வைத்துப்
புதிய உருவம் சமைத்தது.

இந்த மண்ணின் பூர்வீக வழிபாட்டுத் தன்மைகள் அந்த வடிவத்துக்குள்
கலந்து கரைக்கப் பட்டுவிட்டன.

ஒரு புத்தம் புது மதக் கோட்பாடு தயாராகி விட்டது.

பிறப்புகள் பற்றி பழைய யூத மதம் வைத்திருந்த கொள்கைகளை இந்த மண்ணிலே புதுத் தத்துவமாகப் பரவ விட்டது. இதுதான் பழைய இந்தியப் பூர்வீகத் தத்துவம் எனச் சாதித்தது. நம்பவும் வைத்து விட்டது.

பிறப்பு நான்கு வகை. உயரிய அந்தணப் பிறப்பு, அடுத்த அரசப் பிறப்பு,
தொடர்ந்து வணிகப் பிறப்பு, இறுதியான இழிநிலைப் பிறப்பு. இப்படி ஒரு ஏற்பாட்டை முன்னிறுத்தி, இவர்களுக்குத் தொழில்களைத் தீர்மானித்துக் கொண்டு இங்குள்ள மக்களை இப் பட்டியலுக்குள் அடக்கி, ஒரு வாழ்வு முறையை " இதுதான் இங்குள்ள பிரதான வாழ்வு முறை " என்பது போல பிரபகண்டாப் படுத்தி, உறுதி செய்து விட்டது.

இன்று கூட யூத மதத்தில் எந்த மனிதரும் விரும்பிச் சென்று சேர்ந்து விட
முடியாது. அதைப் போல்தான் பிராமண மதத்திலே எவரும் விரும்பிச் சென்று சேர்ந்து விட முடியாது.

யூதத்தில் பிறக்கத்தான் முடியும்.ஏனென்றால் அது புனிதம் நிறைந்த பிறப்பு.
பிராமணத்திலும் பிறக்கத்தான் முடியும். இதுவும் புனித மிக்கப் பிறப்பு.
இந்த இரு மதமும் உலகின் ஏக போகத் தெய்வத் தரிசன மதங்கள்.

மற்ற வர்ணங்கள் இவர்களுக்குத் தரத்திற்குத் தக்கப் பணியாளர்கள். இதுதான் பாரசீக யூதம் இந்த மண்ணில் ஆதி காலத்தில் இருந்து நடத்த முனையும் தீவிர கலாச்சாரம் ஆகும்.

யூத மதம் தன் கட்டுக் கோப்பில் வைத்திருந்த புராண இதிகாசக் கதைகளை
எல்லாம் இந்த மண்ணிலே அங்கொன்று இங்கொன்றுமாக வெட்டிச் சேர்த்து
இந்திய மூலக் கதைகளாக நிறுவிக் கொண்டது. இக் கதைகளில் பலப்பல அற்புதமான வாழ்வியல் தத்துவங்கள் அலாதியாக இருக்கத்தான் செய்கின்றன.
 
மகா பாரதக் கதைகள், ராம காதைச் செய்திகள்,கிருஷ்ண சரித்திர சம்பவங்கள், புனைவுகளாகிய இவை அனைத்தும் யூத மதக் கதைகளின்
நிழல் வடிவங்கள் என்பதை மறந்து விட முடியாது.

அதனால்தான், கோல்வால்கர் இப்படிக் குறிப்படுகிறார், "பிராமணர்களுக்குக் கீழ்ப்படிந்து பிற பிறப்பாளர்கள்( ஜாதியினர் ) பணி செய்தே தீர வேண்டும். இதனை நாம் நிலைநிறுத்த வேண்டும்.அதுதான் தர்ம வாழ்க்கை," என்று சொல்கிறார்.

இந்திய யூத மதம் ( பிராமணீய மதம் ) சுற்றியுள்ள நல்ல தத்துவங்களை எல்லாம் அள்ளி அள்ளி விழுங்கிக் கொண்டு தனக்குள் ஜீரணித்துத் தன்மயமாக்கிக் கொள்வதில் வல்லமை பெற்றிருக்கிறது.

இந்த நட்டில் இருந்த முருக, மற்றும் தாய் தெய்வ வழிபாட்டு முறைகளை,
அதைத் தொடர்ந்து வந்த சைவ நெறிகளை, இவற்றிலிருந்து முரண்பட்ட
சமண குணாம்சங்களை, இன்னும் மாறுபட்ட புத்தத் தத்துவங்களை, தனதாக்கிக் கொண்டு, "எல்லாமே யாம்தாம்" என உரு மாறிக் கொண்டது.

நம் மண்ணிற்கு வந்த பழைய யூத மதம் தன்னுடைய நடை முறைகளை
வைணவ சம்பிரதாயங்களாக இங்கே கடை பிடித்து அதனையும் தன் கூட்டு வடிவத்திற்குள் கொண்டு வந்து சேர்த்து விட்டது.

இந்த ஒருங்கிணைப்பின் போது, மிகச் சாதுரியமாக இவர்களுக்குள்ளேயே
மோதிக் கொள்ளக் கூடிய காரணங்களையும் கற்பித்துத் தந்தது.
சைவத்தைச், சமணத்தோடு மோதவிட்டது. சமணத்தைப் புத்தத்தோடு உரச விட்டது. வைணவம் இத்தனையையும் அடக்கத் தலைப்பட்டது. இந்தப் போராட்டங்களினால் மிகப் பெரிய வரலாறு சிதைக்கப்பட்டது.

நமது பூர்வீகம் தொலைந்து போனது. இந்திய யூத வர்ணம் நம்மை ஆட்சி செய்தது.

இந்த நடைமுறையில் இருந்து ஒரு புதிய வரலாற்று நெறி முறையை
இந்திய யூத வர்ணம் கண்டு பிடித்தது.

" தாங்கள்தாம் எல்லாம் என்ற தத்துவம் உறுதிப்பட வேண்டுமானால் வர்க்கங்களுக்கு இடையே எதிர் எதிர் போர் முகாம்களை அமைத்துக் கொடுத்து அவைகளைத் தங்கள் கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் பூரணமான ராஜதந்திரம்" என்ற தத்துவத்தை நடைமுறைப் படுத்தியது.

No comments:

Post a Comment