Wednesday, November 27, 2013

அந்த மூளை இப்படித்தான் யோசிக்கும்!!!



நாதுராம் கோட்சே காந்தியைச் சுட்டுக் கொன்றார். முதல்முறையாகக் கொலை முயற்சி செய்த போது அது தோல்வியில் முடிந்தது. சில நாள்களிலேயே அடுத்த முயற்சி. அதில் கோட்சே வென்றான். காந்திஜீ மரணித்தார்.

கோட்சே தூக்கிலிடப் பட்டதற்குப் பின்னால் உடல் பரிசோதனை செய்யப்பட்ட போது அவன் வலக்கையில் முஹம்மது இஸ்மாயில்என்று பச்சைக் குத்தி இருந்தான். முஸ்லிம் ஆண்கள் விருத்த சேதனம் செய்து கொள்வது ஒரு அடிப்படை சுன்னத். அந்த அடையாளமும் கோட்சேயிடம் இருந்தது.

இதெல்லாம் வைத்துப் பார்க்கும்பொழுது கோட்சே ஒரு நீண்ட காலத் திட்டத்தோடு இருந்திருக்கிறான். தனியாகக் காந்திஜீயின் கொலை நிகழ்வை நிகழ்த்தி இருக்க முடியாது. ஒருமுறைக்கு இருமுறை முயற்சி நடந்திருக்கிறது என்கிற போதே இது ஒரு கூட்டுச் சதி என்பது தெளிவாகி விடுகிறது.

தான் மாட்டிக் கொண்டால் தனது அடையாளம் ஒரு முஸ்லிம் அடையாளமாக இருக்க வேண்டும் என்பதிலும் சரியான கவனம் வைத்திருக்கிறான்.

காந்திஜீயின் கொலை நிகழ்வதற்கு முன்புவரை அவன் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்ததாகவும் சில காரணங்களால் அதிலிருந்து அவனை வெளியேற்றி விட்டதாகவும் ஆர்.எஸ்.எஸ் தரப்பு இந்த வழக்கில் ஜோடனை செய்தது.

கோட்சே மாட்டிக் கொண்டால் அவன் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் என்று எப்படி முன்திட்டம் போட்டு இருந்தனரோ அதைப் போலவே , ஆர்.எஸ்.எஸ்ஸிலிரிந்து அவன் விடுவிக்கப் பட்டதும் ஒரு முன்திட்டமே.

கோட்சே காந்தியைச் சுடுவதற்கு முன்னால் லாட்ஜ் எடுத்து தங்கி, தவறான சுகபோகங்களில் அவனும் அவன் கூட்டாளியும் இருந்ததாகப் போலீஸ் தகவல் பதிவாகி இருக்கிறது.

எப்படியோ காந்திஜீயைத் தீர்த்துக் கட்ட ஒரு கோட்சே முழுவதுமாகத் தயாரிக்கப் பட்டான். பின்னர், ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எங்களை விட்டு அவன் போய் விட்டான் என அறிவிப்புச் செய்தது. இதுதான் அவர்கள் பாணி.

பாபர் மஸ்ஜித் தரைமட்டம் ஆனது. அதுபோது கல்யாண்சிங் உ.பி.யின் முதல்வராக இருந்தார். அவரைப் பற்றி பி.ஜே.பி. வானளாவ புகழ்ந்துக் கொண்டிருந்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, ராணுவப் பாதுகாப்பு அனைத்தையும் மீறி பாபரி மஸ்ஜித் மண்குவியலானது.

இந்த நிகழ்வுக்குப் பின் பா.ஜ.கவால் தலையில் தூக்கி ஆடப்பட்ட கல்யாண் சிங் , பின்னர் பா.ஜ.கவால் மெதுவாகக் கழட்டி விடப்பட்டார். குற்றச் சாட்டுகளின் பெரும்பகுதியைக் கல்யாண் சிங் மீது தூக்கிப் போட்டார்கள். அவர் கட்சியை விட்டு வெளியேறினார். தனிக் கட்சித் தொடங்கினார்.

மீண்டும் பா.ஜ.கவை நாடினார். ஆனால் இன்று வரை செல்லாக்காசாக பா.ஜ.க அவரை ஆக்கி விட்டது.

அதே பாபர் மஸ்ஜித் இடிப்பில் குதியாட்டம் போட்ட பெண்மணி, ஒரு கட்டத்தில் லால் கிருஷ்ண அத்வானி,முரளி மனோஹர் ஜோஷி தோளில் தாவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய உமாபாரதி. இந்த உமாபாரதியின் மீது மக்கள் வெறுப்பு அதிகரித்த உடனே அவரையும் கழட்டி விட்டது பி.ஜே.பி.

இன்று குஜராத் மோடி, கூத்தாடித் தலைக்கு மேல் அமர்ந்து பவணி வந்துக் கொண்டிருக்கிறார்.

நாதுராம் கோட்சே தயாரான போது காந்திஜீ காணாமல் போனார். குற்றம் நாதுராம் கோட்சேயின் மீது விழுந்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்புத் தப்பிக் கொண்டது.

பாபரி மஸ்ஜித் வீழ்ச்சியின் எரிச்சலை கல்யாண் சிங் மீது வீசி எறிந்து விட்டு பா.ஜ.க அமைதி அடைந்தது. உமாபாரதிக்குப் பெரிய உற்சவமே நடத்தி விட்டு உமாபாரதி பாதிப்புக்கான போது அவரைக் கழட்டிவிட்டு பி.ஜே.பி நகர்ந்துக் கொண்டது.

இன்று மோடிக்கு அதே ஆரவாரம். இந்தியாவில் எதிர்காலத்தில் ஏதோ ஒரு அருவருப்பான ஜனநாயகக் கொலை , அழிவு நிகழ்த்தப் படுவதற்குத் திட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறதோ என்னவோ? மோடிக்கு முன்னால் இருந்தவர்களுக்கு என்ன நிகழ்ந்ததோ அதுதான் மோடிக்கும் நிகழப் போகிறது. பி.ஜே.பி தப்பிக் கொண்டு அடுத்து யாரையாவது தேடிக் கொண்டிருக்கும்.

மேலே சொன்ன நிகழ்வுகள், அடிப்படையில் ஒரே மாதிரியாக நிகழ்ந்து இருக்கின்றன. இனியும் அதுவே நிகழும். ஆழ்ந்து கவனியுங்கள் இது புரியும்.

தலை நிமிர்த்தி, தலை விரித்து ஆடிக் கொண்டிருக்கும் மோடிக்கு இது புரிய நியாயம் இல்லை. நாதுராம் கோட்சேக்கும் இது புரியவில்லை. கல்யாண் சிங்கிற்கும் இது புரியாமல் போனது. உமாபாரதிக்கும் இந்தத் தெளிவு இல்லாது போனது. அந்தப் பட்டியலில் மோடிக்கு அடுத்த இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

இப்படி ஏதாவது நிகழும் பொழுதெல்லாம் நிகழ்த்தியவர்களைப் பலி கொடுக்க பி.ஜே.பியும், அதன் தாயான ஆர்.எஸ்.எஸ்ஸும் தயங்கியதே இல்லை.

இதில் உள்ள வேதனை என்னவென்றால், முதல் தயாரிப்பில் காந்திஜீ காணாமல் போனார்.

அடுத்த தயாரிப்பில், பாபர் மஸ்ஜித் செங்கலும் மண்ணுமாக சிதறி வீழ்ந்தது.

அதற்கடுத்து என்ன நடக்குமோ? இதற்குத் தான் மோடி தயாரிப்பு.

நடந்திருக்கும் வரலாறுகள் இப்படி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது!

No comments:

Post a Comment