Thursday, September 26, 2013

பரிகாரம்!



பள்ளிவாசல் உண்டியலில்
பத்து ரூபாய் போட்டேன்!
பாவ அழுக்கைப்
பனி மறைத்தது!


பாதையில் கிடந்த
கண்ணாடிச் சில்லை அகற்றினேன்!
பாவ அழுக்கைக்
காற்று அசைத்தது!


ஏழை ஒருவனின்
பசித்த வயிற்றுக்காகச்
சிந்திக்கத் தொடங்கினேன்!
பாவ அழுக்கின்

அடையாளமே தப்பிப்போனது!

No comments:

Post a Comment